
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஆக.24) முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.வளைகுடாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக கடந்த 4 மாதங்களாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளதால் மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும் என அறிவித்தார்.இந்தத் திட்டம் வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்பாட்டுக்கு வரும். சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இதன்மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

More Stories
“அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது பொய் புகார்; ஆர்.எஸ்.எஸ். வெறுப்பரசியலின் வெளிப்பாடு” – மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு!
“எங்களை துடைத்தெறிய முடியாது” – டெல்லி போராட்டத்தில் கஜக நிறுவனர் அபிஜித் தீப்கே முழக்கம்