May 11, 2026

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மீனவர்களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள் மற்றும் 7 நாட்டுப்படகுகளுக்கான மீனவர்களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் நிவாரண நிதிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.

Spread the love