
சிவகங்கை மாவட்டம் கொட்டகுடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் திரு. பஞ்சவர்ணம் (78) அவர்கள் மறைவுக்குப் பின்னர், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரது மனைவி மற்றும் வாரிசுகள் இன்று அவரது உடலை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களின் உடற்கூறியல் கல்வி மற்றும் மருத்துவப் பயிற்சிக்கு பயன்படும் வகையில் இந்த உடல் தானம் செய்யப்பட்டது.இந்த மனிதநேயச் செயலைப் பாராட்டி, அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர், பஞ்சவர்ணம் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டு முன்னாள் இராணுவ வீரரின் உயரிய சேவைக்கும், குடும்பத்தினரின் மனிதநேய முடிவிற்கும் மரியாதை செலுத்தினர்.

More Stories
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!
மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: யாரும் தப்பிக்க முடியாது! – அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை!!
கலைஞரின் 103வது பிறந்த நாள்: முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய சிவகங்கை மாவட்ட திமுக வழக்கறிஞர்கள்