சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எழுத்தராக (கிளார்க்) பணிபுரியும் துரைப்பாண்டி என்பவர் பொதுமக்களிடம் மனிதநேயமின்றி கடுமையான சொற்களாலும் ஒருமையிலும் பேசி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு…!! இவர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா..? என்பதே பொதுமக்களின் கேள்விக்குறியாக உள்ளது..!? ஆனால் சிவகங்கை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரத்து போக்குவரத்து அலுவலர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் மேல்மட்ட அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில் இடைநிலை ஒரு சில பணியாளர்களால் மாவட்ட அளவில் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து துணை ஆணையர், இணை ஆணையர் துரித நடவடிக்கை எடுத்து இதுபோல் பொதுமக்களுக்காக பணியாற்றும் அலுவலகங்களில் பொதுமக்களிடையே கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி மேலும் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்பவர் மீது நடவடிக்கை எடுத்தும் வருகிறார்கள் .அவ்வாறு இருக்கையில் ஒரு சிலர் மட்டும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் பிறரிடம் கடுஞ்சொற்களால் கடிந்து விழுவதாகவே உள்ளார்கள் இவர்களெல்லாம் பணத்திற்காக மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்றும் பணம் கொடுப்பவர் உள்ளம் சிரித்து பேசுவதும் ஏழை எளிய மக்களிடம் கடுஞ்சொற்களை பொலிவுதுமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று வேதனையுடன் பெயர் சொல்ல விரும்பாத இரு சக்கர வாகன உரிமையாளர் கூறினார்.

More Stories
தொண்டியில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகன நேருக்குநேர் மோதல்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
பாலியல் வழக்குகள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது