June 26, 2025

சிவகங்கை மாவட்டம் கண்டவராயான்பட்டி ஸ்ரீகிணத்தடி காளியம்மன் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம் கண்டவராயான்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகிணத்தடி காளியம்மன் திருக்கோயில்

ஸ்தலவரலாறு :

சுமார் பல்லாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டும் பொழுது பூமியின் அடியில் இருந்து சுயம்பு வடிவாக கண்டெடுக்கப்பட்ட காளியம்மன் விக்கிரகத்தை ஸ்ரீ கிணத்தடிகாளியம்மன் என்று பெயர் சூட்டி அம்மனுக்கு கோயில் கட்டி ஆதிகாலத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜைபுனஸ்காரங்கள் நடத்தி தொன்று தொட்டு வழிபட்டுவந்தனர் . பழமை வாய்ந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிலையை வழிபடுவோர் கேட்ட வரம் தரும் கிணற்றடி காளியம்மனாக மனதில் கேட்ட வரத்தை கேட்ட நேரத்தில் பெற்ற தாய் தன் பிள்ளைக்கு கொடுப்பதை போல் கொடுக்கும் காளியாக அருள் பாலித்து வருகின்றார் . இவ்வாறு பழம் பெருமை வாய்ந்த கோயில் 28 ஆண்டுகள் புனரமைக்காமல் இருந்த சூழ்நிலையில் தற்பொழுது கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலின் பூசாரி மற்றும்அறங்காவலர் விடுத்துள்ள கோரிக்கையில் பக்தகோடிகள். ஆன்மீக பெரியோர்களும் பொதுமக்களும் இணைந்து கோயிலை புனரமைக்க தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருளுதவியையும் அளித்து அனைவரும் அம்மனின் அருளை பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.