March 14, 2026

சிவகங்கைமாவட்டத்தில் போலி ஆவணத்தின் மூலம் பட்டா நிலங்கள் அகபகரிப்பு ! உடந்தையாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் ஜானகி !

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அய்யனார்குளம் கிராமத்தில் முறையான ஆவணங்களும் அதற்கான ஆதாரங்களும் இல்லாமல் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு போலியான ஆவணங்கள் மூலம் 6 ஏக்கர் பட்டா மாறுதல் செய்த முத்து கிராம நிர்வாக அலுவலர் ஜானகி மீது மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவரின் கோரிக்கை .

அது மட்டுமல்லாது இதுபோல் பல இடங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் பணம் உள்ளவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு புறம்போக்கு நிலங்களையும் பட்டா போட்டு தருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்,வருவாய் கோட்டாட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து தவறுதலான கிடைக்கப் பெற்ற பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கை.

Spread the love