சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட மானாமதுரை திருப்புவனம் திருப்பாச்சேத்தி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் பொதுமக்களுடன் பேருந்து நிலையத்தில் புத்தாண்டை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் கலந்து கொண்டு கேக் வெட்டி காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினார். அதே போன்று திருப்புவனம் திருப்பாச்சேத்தி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் ,சார்பு ஆய்வாளர்கள் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக வரவேற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் கேக் வெட்டி மகிழ்ந்தது என்பது முதல் முறையாகும். புத்தாண்டை முன்னிட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

More Stories
மானாமதுரை அரசு டாஸ்மாக் கடையில் திருட்டு சம்பவம் ஒருவர் கைது: போலீஸ் விசாரணை
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கொலை: மூன்று சிறார் உட்பட ஆறு பேர் கைது!
வைகை வீரனின் கியூ ஆர் கோடு சித்திரை திருவிழாவில் பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு !