செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நந்திவரம் கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாநாடு எம்.கே.தண்டபாணி மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு தண்டபாணி வசந்தி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தலைமை தாங்கினார் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் நகர மன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு பத்து பேருக்கு நான்கு சக்கர தள்ளுவண்டி வாகனம் 12 பேருக்கு தையல் இயந்திரம் 10 பேருக்கு இஸ்திரி பெட்டி ஆகிய உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முன்னதாக கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் தண்டபாணி நினைவிடம் வரை மௌன ஊர்வலம் நடந்தது இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

More Stories
காலாவதியான மாத்திரை விவகாரம் ! மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்வாரா?
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!!
சிவகங்கை வீர விதை சிலம்பம் அணி கலை வளர்மணி டாக்டர் பெருமாள் தலைமையில் கேரளாவில் பதக்கங்களை பெற்று சாதனை