May 11, 2026

வேலூரில் போக்க்ஷோ கைதிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

வேலூர் நவ-15

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைதான சேகர் என்ற முதியவருக்கு போக்க்ஷோ சட்டத்தில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2018ல் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீரலில் ஈடுபட்ட புகாரின் பேரில் விருதம்பட் காவல் நிலையத்தில் சேகர் (வ-66) த/பெ முனிசாமி கஸ்பா என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.20000/- அபராதமும் விதித்து வேலூர் போக்க்ஷோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Spread the love