June 27, 2025

சிவகங்கையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் தலவரலாறு

அனுமன் என்றதுமே அனைவரும் நினைவில் வருவது அவருடைய பலம், பராக்கிரமம், புத்தி கூர்மை, பக்தி, சேவை மனப்பான்மை தான். ராமனின் தீவிர பக்தனான அனுமன், சிவ பெருமானின் அவதாரமாக கருதப்படுகிறார். சிவனின், ருத்ர அவதாரமே அனுமன் என சொல்லப்படுகிறது. மாருதி, அனுமன், ஆஞ்சநேயர், அஞ்சனை மைந்தன், உள்ளிட்ட பல பெயர்களால் அனுமனை நாம் அழைக்கிறோம். புதவ், வியாழன், சனி ஆகிய கிழமைகள் அனுமனை வழிபடுவதற்கு ஏற்ற நாட்களாக சொல்லப்படுகிறது.ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரின் உருவத்தில் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையை பார்த்தபடி காட்சி தருவார்.

  • கிழக்கு நோக்கிய முகம் அறிவு மற்றும் புத்திகூர்மையை குறிப்பதாகும்.
  • தெற்கு நோக்கிய நரசிம்மரின் முகம் தைரியம் மற்றும் பாதுகாப்பை குறிப்பதாகும்.
  • மேற்கு நோக்கிய கருடனின் முகம் ஆன்மிக மற்றும் சுதந்திர உணர்வை குறிப்பதாகும்.
  • வடக்கு நோக்கிய வராஹ முகம் செல்வம் மற்றும் மிகுதியை குறிப்பதாகும்.
  • கடைசியாக இருக்கும் ஹயக்ரீவர் முகம் மேல் போக்கி பார்த்தவாறு இருக்கும். இது ஞானம் மற்றும் அறிவுத்திறனை குறிப்பதாகும்

சிவகங்கையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சிறப்பாக பூஜை நடைபெறும் நினைத்ததை நடத்தி கொடுப்பார் பஞ்சமுக ஆஞ்சநேயர் 19ஆவது பதிவும் வாக்கு ஸ்தானம் சொன்னது நடக்கும் நம்பிக்கையோட கேட்டால் ஸ்தாபகர் சிவக்குமார் சுவாமிகள் தொடர்புக்கு: 97 500 10496 –