June 26, 2025

சோஃபியா குரேஷி பற்றி சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சர் மீது வழக்குப் பதிய உத்தரவு –

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரபூர்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடர் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கடற்படை கமாண்டர் ரகு நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் இணைந்து வெளியிட்டு வந்தனர்.கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதான், அனுராதா சுக்லா அமர்வு, மாநில அமைச்சர் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள இந்நிலையில் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார். “என்னுடைய கருத்து அனைத்து சமூகத்தினரையும் புண்படுத்தியுள்ளது. நான் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.