
மதுரை மாநகர காவல் துறை சார்பாக சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளின் போது பொதுமக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்யும் நோக்கத்தோடு கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் தங்களுக்கோ அல்லது தங்களுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கோ ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வைகை வீரன் என்ற கியூ ஆர் கோடு குறியீடு உள்ள சுவரொட்டிகள் மதுரை மாநகரத்தில் சித்திரை திருவிழா நடைபெறும் பகுதிகளில் சுமார் 150 இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க தங்களுடைய மொபைல் போனில் அருகில் உள்ள கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்தால் வைகை வீரன் என்ற பக்கம் திறக்கப்படும் அதில் தங்களது மொபைல் நம்பர்களை பதிவு செய்ய வேண்டும் பின்பு கியூ ஆர் ஸ்கேனர் போஸ்டரில் உள்ள சீரியல் நம்பரை பதிவு செய்ய வேண்டும் பின்பு தங்களுக்கு எழும் புகாரை வாய்ஸ் மெசேஜ் ஆகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பதிவு செய்யலாம் அவ்வாறு சித்திரை திருவிழாவில் பாதிக்கப்படும் நபர் பதிவு செய்யும் புகார் சம்பந்தப்பட்ட சரக காவல் ஆய்வாளர் உதவி ஆணையர் துணை ஆணையர் காவல் ஆணையர் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் நுண்ணறிவு பிரிவுக்கும் உடனே தகவல் மெசேஜ் ஆக சென்றடையும் மேலும் பொதுமக்கள் காவல்துறையின் புகார் பதிவு செய்தமைக்கு ஏற்பளிப்பு உடனே குறும்பு செய்தியாக அனுப்பப்படும் குறிப்பாக சித்தரைத் திருவிழாவில் பொதுமக்கள் தங்கள் அருகில் நடக்கக்கூடிய திருட்டு சம்பவங்கள் இளைஞர்களிடையே ஏற்படக்கூடிய சண்டைகள் கூட்டத்தில் ஏற்படும் அசம்பாவிதங்கள் மட்டும் திடீரென உடல்நிலை பாதிக்கப்படும் நிலை குறித்து தெரிவிக்கலாம் எனவே பொதுமக்கள் சித்திரைத் திருவிழாவில் காவல்துறையினரை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய இந்த வைகை வீரன் என்ற qr கோடு அடிப்படையிலான பொது குறைதீர்க்கும் அமைப்பை தொடர்பு கொண்டு பயனடைமாறு மதுரை மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More Stories
மானாமதுரை அரசு டாஸ்மாக் கடையில் திருட்டு சம்பவம் ஒருவர் கைது: போலீஸ் விசாரணை
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கொலை: மூன்று சிறார் உட்பட ஆறு பேர் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழக இளைஞருக்கு நடந்த கொடூரம் !!!