June 26, 2025

உலக புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில்2025ம்ஆண்டு ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு:55 சமையல் கலைஞர்கள் கொண்டு செட்டிநாடு முறையில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமான அறுசுவை அன்னதானம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் இன்று(01/01/2025) ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.15 மணி அளவில் நடை திறக்கப்பட்டது புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது . இத்திருத்தலத்தில் மூலவர் அருள்மிகு கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

தமிழர்களின் முதல் கடவுளாக போற்றப்படுகின்ற விநாயகப் பெருமானை தரிசிக்க தமிழக முழுவதும் மட்டுமன்றி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர் .1300 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல தற்போது கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வரும் பக்தர்கள் அவர்கள் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் தரிசிக்க கோயில் வளாகத்தில் குவிந்து கற்பக விநாயகரை தரிசித்து வருகின்றனர் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . இதே போல தற்போது கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வரும் பக்தர்கள் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் தரிசிக்க கோயில் வளாகத்தில் குவிந்து கற்பக விநாயகரை தரிசித்து வருகின்றனர் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . பக்தர்களின் வசதிக்காக கோயில்நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது .காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர் .புத்தாண்டு தினத்தைமுன்னிட்டுபிள்ளையார்பட்டியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

.

கற்பக விநாயகர் அன்னதான குழு சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு 55 சமையல் கலைஞர்கள் கொண்டு காலை 6 மணி முதல் கேசரி,இட்லி,ஊத்தாப்பம், பொங்கல்,வடை காலை உணவாகவும், மதியத்திற்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர், சாம்பார்,லெமன்,வடை என செட்டிநாடு ஸ்பெஷல் அறுசுவை விருந்து மாலை 5 மணி வரை பிரம்மாண்டமான விருந்து அளிக்கப்பட்டு வருகிறது.