
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணை அன்று கோவிலில் இருந்து சாமி-அம்பாள் எழுந்தருளி நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு சென்று பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இந்த நிலையில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்று காலை7 மணிக்கு சாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்முக்கிய பகுதிகளில் எழுந்தருளி வீதி உலா வரும் சாமி பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு செல்லும். இதனால் நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்றும் அந்த நேரம் பக்தர்கள் தீர்த்தம் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். என்று கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

More Stories
சிவகங்கை மாவட்டம் கண்டவராயான்பட்டி ஸ்ரீகிணத்தடி காளியம்மன் திருக்கோயில்
மதுரை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 50 நாட்களாக நடைப்பெற்ற அன்னதானம் நிறைவு விழா
உலக புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில்2025ம்ஆண்டு ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு:55 சமையல் கலைஞர்கள் கொண்டு செட்டிநாடு முறையில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமான அறுசுவை அன்னதானம்