June 26, 2025

கொடைக்கானல் இ-பாஸ்& பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை !

நவம்பர் 16

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கொடைக்கானல் செல்வதும் வழக்கம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்பதையும், 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு செல்ல தடை விதித்திருப்பது குறித்தும் பழனி நகர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பழனியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியை சார் ஆட்சியர் கிஷன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இருசக்கர வாகன பேரணியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்படும் பகுதிகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் வலம் வந்து பழனி அடிவாரம் பால்பண்ணை அருகே கொடைக்கானல் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்