June 26, 2025

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

இராமநாதபுரம். நவ 9

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்கனவே மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை குறித்து எடுத்துரைத்ததுடன் மேலும் இன்றைய தினம் மீனவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்கள்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலையர் தெரிவிக்கையில் மீனவர்களின் முக்கிய கோரிக்கையான இராமேஸ்வரம் நகர் பகுதியில் மீனவர் நல குடியிருப்பு பகுதியில் சாலைகள் சீரமைத்தல் மற்றும் கடலோர பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்பு பகுதிகளில் போதியளவு தெருவிளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டுதல் குறித்தும் அதேபோல் விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொடுக்கவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அரசு இடங்கள் தேர்வு செய்து விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சாலைகள் சீரமைத்திடவும் போதியளவு தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த ஆண்டுகளில் மீனவர்களுக்குரிய நிவாரணங்கள் மீனவர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் விடுபட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க இயக்குநர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும். மேலும் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மீனவளத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி , இந்திய கடற்படை கமாண்டர் (இராமேஸ்வரம்) திரு.நரேந்தர்சிங் அவர்கள், உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார் , கோபிநாத் , சிவக்குமார் மற்றும் மீனவர் சங்க பிரதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.