கோவை நவ 9
கோவை மாவட்டம்
சூரசம்ஹார வதம் நிகழ்வுக்குப் பின்னர்
முருகப்பெருமான்
தேவர்களை சிறைமீட்டு அசுரர்களை வதம் செய்து அழித்த முருகப் பெருமானுக்கு இந்திரன் மகள் தெய்வானையை மணம் முடித்து தருகிற புராண நிகழ்வுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடையும் என்பது ஐதீகம்
எனவே அன்று முதல் தற்பொது வரையிலும் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றுவருகிறது…
அதனைத்தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் முருகப் பெருமான் திருத்தலங்களில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது…
கோவை இடையர்பாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் சன்னிதானத்தில் முதலாமாண்டு கந்தசஷ்டி , சூரசம்ஹாரம், இலட்சார்ச்சனை திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது….
இந்த சூரசம்ஹாரத்தில் ஆறுமுக வேலவருக்கு திருமஞ்சனம் வேள்வி அர்ச்சனை வழிபாடு , சண்முக அர்ச்சனை அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்வு , வீரபாகு தூது, சூரசம்காரம் ஆறுமுக வேலவர் எழுந்தருளி கஜமுகசுரனையும் தாரகா சூரணையும் சிங்கமுக சூரணையும் சம்ஹாரம் செய்து சூரபதுமனை சேவலும் மயிலுமாக ஏற்றருளும் காட்சி நடைபெற்றது.
கோவில் தலைவர் பெஸ்ட் எம் செல்வராஜ், செயலாளர் ஆர் அசோக்குமார், பொருளாளர் ஆர் ரவிக்குமார், துணைத் தலைவர் ஆர் ராஜேந்திரன், துணை செயலாளர் வி சி ஆறுமுகம், துணை பொருளாளர் டி லட்சுமணன், ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகவும் பிரம்மாண்டமாக செய்திருந்தனர்….
சூரசம்காரம் நிகழ்வானது கோவில் சன்னிதானத்திலிருந்து புறப்பட்டு அப்பகுதி முழுவதும் ஊர்வலமாக நடைபெற்று பின்னர் சன்னிதானம் வந்தடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவில் நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கையில் கந்த சஷ்டி விழாவானது திருக்கோவிலில் முதல் முறையாக நடைபெற்றது பொது மக்கள் மிகவும் வரவேற்பளித்துள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கந்த சஷ்டி விழா நடைபெறும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொண்டனர்….
More Stories
சிவகங்கை மாவட்டம் கண்டவராயான்பட்டி ஸ்ரீகிணத்தடி காளியம்மன் திருக்கோயில்
மதுரை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 50 நாட்களாக நடைப்பெற்ற அன்னதானம் நிறைவு விழா
உலக புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில்2025ம்ஆண்டு ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு:55 சமையல் கலைஞர்கள் கொண்டு செட்டிநாடு முறையில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமான அறுசுவை அன்னதானம்